கோவையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, ஜனவரி 05

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று அறிவித்த தமிழக அரசு பின்னர் 2.44 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் கூறியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலக பணிமனையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதை ஆட்சியர் திரு டி.என். ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பாண்டி, பொபது மேலாளர் இ. கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...