பெண்களுக்காக பெண்களே நடத்தும் ”ஜெயின் மேளா” நாளை தொடக்கம்

கோவை, ஜனவரி 5

கோவையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக, ஜெயின் மேளா என்ற நிகழ்ச்சி நாளை முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது.

சுபர்ஷ்நாத் பக்தி மண்டல் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி நேரு மைதானத்தில் நடக்கிறது. ஜெயின் சமூகத்தினரின் கோவில்களில் பாடும் பாடல்கள் பாடப்படுகின்றன.



”25-வது ஆண்டாக ”ஜெயின் மேளா” கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஏராளமான சுவாரஸ்மான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அதேபோல, பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.” இவ்வாறு கூறினார் மண்டல் குழுவின் உறுப்பினர் லதா பஃப்னா.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் வீடுகளில் தயாரிக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த ஜெயின் மேளா நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.



இந்த நிகழ்ச்சி குறித்து பக்தி மண்டலின் உறுப்பினர் ஹன்ஷா பஃப்னா பேசுகையில், நிறைய பெண்களுக்கு திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த முடியாது சூழல் உள்ளது. ஒருவர் சிறப்பாக சமைக்கிறார் என்றால், அவரது திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் இந்த ஜெயின் மேளா என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...