கோவை, ஜனவரி 5
கோவையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக, ஜெயின் மேளா என்ற நிகழ்ச்சி நாளை முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது.
சுபர்ஷ்நாத் பக்தி மண்டல் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி நேரு மைதானத்தில் நடக்கிறது. ஜெயின் சமூகத்தினரின் கோவில்களில் பாடும் பாடல்கள் பாடப்படுகின்றன.

”25-வது ஆண்டாக ”ஜெயின் மேளா” கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஏராளமான சுவாரஸ்மான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அதேபோல, பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.” இவ்வாறு கூறினார் மண்டல் குழுவின் உறுப்பினர் லதா பஃப்னா.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் வீடுகளில் தயாரிக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த ஜெயின் மேளா நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து பக்தி மண்டலின் உறுப்பினர் ஹன்ஷா பஃப்னா பேசுகையில், நிறைய பெண்களுக்கு திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த முடியாது சூழல் உள்ளது. ஒருவர் சிறப்பாக சமைக்கிறார் என்றால், அவரது திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் இந்த ஜெயின் மேளா என்றார்.
கோவையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக, ஜெயின் மேளா என்ற நிகழ்ச்சி நாளை முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது.
சுபர்ஷ்நாத் பக்தி மண்டல் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி நேரு மைதானத்தில் நடக்கிறது. ஜெயின் சமூகத்தினரின் கோவில்களில் பாடும் பாடல்கள் பாடப்படுகின்றன.

”25-வது ஆண்டாக ”ஜெயின் மேளா” கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஏராளமான சுவாரஸ்மான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அதேபோல, பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.” இவ்வாறு கூறினார் மண்டல் குழுவின் உறுப்பினர் லதா பஃப்னா.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் வீடுகளில் தயாரிக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த ஜெயின் மேளா நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து பக்தி மண்டலின் உறுப்பினர் ஹன்ஷா பஃப்னா பேசுகையில், நிறைய பெண்களுக்கு திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த முடியாது சூழல் உள்ளது. ஒருவர் சிறப்பாக சமைக்கிறார் என்றால், அவரது திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் இந்த ஜெயின் மேளா என்றார்.