ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு காலஅவகாசம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வரும் 12-ம் தேதி வரை அப்பல்லோவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 03:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வரும் 12-ம் தேதி வரை அப்பல்லோவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு அப்பல்லோ நிர்வாகம் 2 வார காலஅவகாசம் கோரியிருந்தது.

இதனை ஏற்ற விசாரணை ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12-ம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், குடும்ப மருத்துவர் சிவக்குமார் இருவரும், அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, இன்று விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகி விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் பேட்டி அளிக்கும் போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எம்பால்மிங் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்தேன். எனக் கூறினார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...