விவசாய சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

உடுமலை அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பாசன வசதி மூலம், 25,250 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், ஜனவரி 03:

உடுமலை அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பாசன வசதி மூலம், 25,250 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பரப்பில் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் அணையின் நீர் இருப்பு அடிப்படையில் இரு பாசன பகுதிகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அணையின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது.

இதனையடுத்து, கரூருக்கு உட்பட பாசன பகுதியில் போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால் அணையில் நீர்இருப்பு செய்யப்பட்டு தற்சமயம் 90 அடிக்கு 59.71 அடியாக உள்ளது. இதிலிருந்து கரும்பு, நெல் பயிர்களுக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் முதலமைச்சரின் உத்தரவுப்படி இன்று காலை எட்டு மணிக்கு பிரதான கால்வாயில் இருந்து வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் புதிய பாசன பகுதிகளுக்கு திறக்கப்பட்டது.

தண்ணீர் திறந்து வைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு பிரதான கால்வாயில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றனர்.

மேலும், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், பழைய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் தண்ணீர் தற்சமயம் வேண்டாம் என கூறியதால் இன்று புதிய ஆயக்கட்டு பாசன பரப்பிற்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தண்ணீர் கேட்கும் போது வழங்கப்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...