நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, ஜனவரி 02

நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர்,  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்க சட்ட அனுமதியும், அதற்குரிய அரசு ஆணையையும் தமிழக அரசு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் சூலூர் அருகே ”கோவை நீரா” என்ற பெயரில் பானம் தயாரித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில் கொண்ட குழுவினர் முறையாக அனுமதி பெற்று, விற்பனை நடத்த ஆலோசனை வழங்கியதோடு அரசு ஆணையையும் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, அரசு ஆணையில் ரூ. 3 கோடி முதல் ரூ. 12 கோடி வரை நீரா பானம் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் விவசாயிகள் நீரா பானத்தை உற்பத்தி செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே, அரசு தென்னை மரங்களைக் கணக்கெடுத்து, அதற்கு உண்டான தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், தங்களுக்கு நீரா பானம் இறக்குவது, விற்பனை சம்பந்தமான விதிகள் உரிமம் பெறும் முறைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவும், நீரா உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தேவையான முதலீட்டுத் தொகையையும் அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...