3-ம் ஆண்டு ” டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர்” உணவுத் திருவிழா வரும் 5-ம் தேதி தொடக்கம்

வ.உ.சி மைதானத்தில் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், அனைத்து முன்னணி ஓட்டல்கள், ரெஸ்ட்டரெண்ட்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க உள்ளன. சைவம், அசைவம், இனிப்பு, ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் என பலவகையான உணவுகளை ருசிக்கலாம். என இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவை, ஜனவரி 02

கோவை மாவட்ட ஓட்டல் கூட்டமைப்பு சார்பில் 3-ம் ஆண்டு ” டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர்” என்ற உணவுத்திருவிழா வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. 



வ.உ.சி மைதானத்தில் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், அனைத்து முன்னணி ஓட்டல்கள், ரெஸ்ட்டரெண்ட்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க உள்ளன. சைவம், அசைவம், இனிப்பு, ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் என பலவகையான உணவுகளை ருசிக்கலாம். என இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

மில்கி மிஸ்ட் தயாரிப்புகள் சார்பில் நடக்கும் இந்த விழாவில், 140 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், 30 முதல் 40 அரங்குகள் அசைவத்திற்கும், 20 முதல் 25 சைவ அரங்குகளும், 10 முதல் 20 வரை ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் உள்ளிட்டவைகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த உணவுத் திருவிழாவில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விழாவில் பங்கேற்பதற்கு, நபருக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். அதில், ரூ.50 நுழைவுக்கட்டணம் தவிர்த்து எஞ்சிய ரூ. 100-க்கு தேவையான உணவுகளை சாப்பிட்டு மகிழலாம். 

வரும் 5-ம் தேதி மாலை 04.30 மணிக்கு தொடங்கும் இந்த உணவுத் திருவிழாவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், காவல் ஆணையர் பெரியய்யா, எம்எல்ஏக்கள் அருண்குமார், அம்மன் அர்ஜீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொடக்க நாளில், ஆளப்போறா தமிழன் பாடல் புகழ் திரைப்பட பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் தேதியன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் ப்ரியா, நிக்கில் மேத்யூ குழுவினரின் இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதே நாளில், சின்னத்திரை சமையற்கலைஞரும், நடிகையுமான அனுராதா கிருஷ்ணடுமுர்த்தியின் சமையல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ம் தேதி இயற்கை உணவு மருத்துவர் ஆறாம்திணை சிவராமனின் உணவுக் கருத்தரங்கும், ஜக்ளர் இட்டைச் சகோதரர்களின் ஜக்ளிங் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை ஜீ தொலைக்காட்சி புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். 

இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களை மகிழ்விக்கும் விதமாக திண்டுக்கல் சக்திபோர் பறையின் சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகியன நடைபெற இருக்கிறது. மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட உள்ளது. 3 நாட்கள் நடக்கும் இந்த உணவுத் திருவிழா, மாலை 05-00 மணி முதல் 11.00 மணி வரை நடக்கிறது. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....