அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை, ஜனவரி 1

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 6-ம் தேதியன்று அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட கடந்த சில காலமாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, டிடிவி தினகரன் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

இதில் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, வருகின்ற ஜனவரி 6-ம் தேதி அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1963ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அச்சகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 100 குடும்பங்களுக்கும் குறைவாகவே உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கத் துவங்கப்பட்ட இந்த அரசு அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...