அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் : கோவை மாவட்ட கண்காணிப்பாளர்

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

கோவை, டிசம்பர் 31

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல்  நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம்  இன்று கூறினார்.

அவர் கூறுகையில் 'கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 33 காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. 

இந்த காவல் நிலையங்கள் அனைத்திலும் நூலகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள வரவேற்பு அறைகளிலும் நூலகங்கள் உருவாக்கப்பட உள்ளன. 

வரும் பொங்கல் தினத்தில் இருந்து செயல்பட இருக்கும் இந்த நூலகத்தில் போலீசார் மட்டுமல்லாது பொதுமக்களும் புத்தகங்களை எடுத்து படிக்கலாம். 

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக  நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன' என்றார்.

புத்தாண்டை முன்னிட்டு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர். .Pa. மூர்த்தி.

நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதனையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று காலை செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் குற்றசம்பவங்களின் எண்ணிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்ட செய்திக்குறிப்புகள் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து,  செய்தியாளர் சந்திப்பின் முடிவில் தான் எழுதிய 'பெண்மை வாழ்க' என்ற புத்தகத்தையும், தான் படித்த சில புத்தகங்களையும் செய்தியாளர்களிடம் வழங்கியதோடு, புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள கூறி புத்தாண்டு தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...