மாநகராட்சி சார்பில் தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா

கோவை, டிசம்பர் 30

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் ஸ்வச் சர்வெக்ஷான் 2018-ன் ஒருபகுதியாக தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா கோவை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

கோவையில் தனியார் ஹோட்டலில் இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 4,041 உள்ளாட்சி அமைப்புகள் கலந்து கொள்கிறது. இதில், கோவை மாநகராட்சியும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது.

அதில், ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் மருத்துவமனைகள், உணவகங்கள், காய்கறி மொத்த விற்பனையகங்களுக்கான தூய்மை கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அக்கணக்கெடுப்பில் முழுமையாகத் தூய்மை பணியாற்றி சிறப்பான தரவரிசைப்பட்டியல் பெற்ற தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் காய்கறி மொத்த விற்பனையகங்களின் நிர்வாகிகள் மற்றும் கோவை மாநகராட்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய மாநகராட்சி லாரி ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஸ்வச் லோகோ மற்றும் ஸ்வச் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, கோவை மாநகராட்சி தூய்மை தூதர்கள் திரைப்பட நடிகர் கே.பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன், தன்னார் அமைப்பினர் மற்றும் கோவை முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...