கிரண்பேடி ஆளுநரா இல்ல எதிர்கட்சி தலைவரா..? : புதுச்சேரி முதலமைச்சர் நாரயாணசாமி கேள்வி

டிசம்பர் 30

கிரண்பேடி ஆளுநரா அல்லது எதிர்கட்சி தலைவரா என்பது தெரியவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியார்களிடம் கூறுகையில், உண்மைக்கு புறம்பான செயல்களைச் செய்வது, கிரண்பேடிக்கு வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து கிரண்பேடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். கிரண்பேடி, ஆளுநரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என தெரியவில்லை, இதற்கு முடிவு எட்டும் காலம் விரைவில் வரும். 

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் கிரண்பேடியின் அறிக்கைகளும் செயல்பாடுகளும் அரசுக்கு எதிராக உள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு கிரண்பேடி குழப்பம் விளைவிக்கிறார்.  புதுச்சேரியில் இரசிது தராமல் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...