குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றுவது குறித்து 22-வது வார்டில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.

கோவை, டிசம்பர் 29

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார். அவர், வீடுவீடாக சென்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய யூனியன் உதவியுடன் கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டில் சூன்யா திட்டம் 3 வருடங்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கண்ட வார்டில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தரம் பிரித்து பெறப்பட்டு, சாலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்து தூதரக அமைப்பு, கோவை மாநகராட்சியில் கெபாசிடீஸ் திட்டத்தின் கீழ் ஐசிஎல்இஐ (ICLEI) உடன் இணைந்து சூன்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தற்பொழுது 22 மற்றும் 24-வது வார்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் கொடுப்பது பற்றி விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு திட்டம் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும். தரம் பிரித்து சேகரிக்கும் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இந்த வார்டுகளில் உள்ள குப்பை தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு, குப்பைத் தொட்டிகள் இல்லாத வார்டுகளாக மாற்றப்படும். 

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, செயற்பொறியாளர்கள் லட்சுமணன், சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...