கோவையில் கஞ்சா கடத்தியதாக கேரள வாலிபர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை, டிசம்பர் 29

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் உமர் (25). பணி நிமித்தமாக கோவை வந்த அவர் கோவைபுதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உமரும் மற்றுமொரு நபரும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, உக்கடம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் உமரின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். இதானால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த சூழலில், உமருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பியோடினார். போலீசார் உமரிடம் சோதனை நடத்தியபோது 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து உமரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்தனர். அப்போது, தன்னுடன் வந்த நபர் 'லிப்ட்' கேட்டு வந்ததாகவும், அவரே கஞ்சா பொட்டலத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறினார். 

தற்போது, உமரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...