மோடியே பிரச்சாரம் செய்தாலும் பாஜகவால் நோட்டாவை வீழ்த்த முடியாது : தாமக

கோவை, டிசம்பர் 27

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது என தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஒகி புயல் தொடர்பாக ஆய்வு செய்யும் மத்திய குழு அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கப் பரிந்துரைக்க வேண்டும். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது பணத்தினால் பெறப்பட்ட வெற்றி. திமுக கூட்டணி கட்சிகளில் தொண்டர்கள் இல்லாமல் தலைவர்கள் மட்டுமே இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் நல்ல அரசியல் தலைவர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...