ஒகி புயலால் தமிழக மீனவர்கள் 400 பேர் மாயம் : மாநில வாரியாக விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு

டிசம்பர் 27

ஒகி புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 400 பேர் மாயமானதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

ஒகி புயலில் சிக்கிய மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில், டிசம்பர் 15 வரை 400 தமிழக மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், டிசம்பர் 20 வரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மதுரை உய கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் டிசம்பர் 22ம் தேதியன்று தமிழக அரசு அளித்த பதிலில், ஒகி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்கள் 271 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒகி புயலில் மாயமான மீனவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் டிசம்பர் 23-ம் தேதி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 275 தமிழக மீனவர்கள் மாயமாகி இருப்பதாகக் கூறினார்.

மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு இடையே முரண்பாடு நிலவு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக மத்திய அரசு இன்று புதிய புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டிருப்பதாவது :

டிசம்பர் 15 வரை மாயமான மீனவர்கள் : 

தமிழகம் - 400, கேரளா - 261, லட்சத் தீவுகள் - 0 மொத்தம் : 661

டிசம்பர் 20 வரை மீட்கப்பட்ட மீனவர்கள் விபரம் : தமிழகம் - 453, கேரளா - 362, லட்சத்தீவுகள் - 30. மொத்தம் - 845

மேலும், எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் மாயமான மற்றும் மீட்கப்பட்ட மீனவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாயமான மீனவர்கள் குறித்து தகவல் தர வேண்டிய பொறுப்பு தமிழக மீன்வளத்துறைக்கு உள்ளது எனவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...