கோவை, டிசம்பர் 9
கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி ஆதித்தமிழர் கட்சியினர் இன்று மதியம் மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டதாவது:-
கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செஞ்சிலுவை சங்கம் எதிரே உள்ள போக்குவரத்து தீவுத் திடலில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவரும் சிலை அமைக்க பரிந்துரை செய்தார் ஆனால், இன்னும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறாக தலைவர்கள் சிலை வைக்க கூடாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி சிலை அமைக்க காவல்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜனநாயக முறைப்படி சட்டமேதையின் உருவச்சிலை அமைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி ஆதித்தமிழர் கட்சியினர் இன்று மதியம் மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டதாவது:-
கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செஞ்சிலுவை சங்கம் எதிரே உள்ள போக்குவரத்து தீவுத் திடலில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவரும் சிலை அமைக்க பரிந்துரை செய்தார் ஆனால், இன்னும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறாக தலைவர்கள் சிலை வைக்க கூடாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி சிலை அமைக்க காவல்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜனநாயக முறைப்படி சட்டமேதையின் உருவச்சிலை அமைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.