கோவை, டிசம்பர்.9 :
கோவையில் தமிழ் கல்வெட்டு ஒன்று பாதாள சாக்கடையை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தமிழ் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
அலட்சியம் என்பது பலரின் ரத்தக்கூறுகளிலும் குடியேறிக்கொண்டுள்ள இந்த காலத்தில் இன்னும் கடமையும், பற்றுணர்வும் கொண்ட மக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு தாம் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.
கோவை கணபதி பேருந்து நிறுத்தம் அருகில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.
மூடப்படாமல் இருந்த இந்த பாதாள சாக்கடையினை தமிழ் கல்வெட்டு ஒன்றை கொண்டு மூடி வைத்துள்ளனர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.
இந்த கல்வெட்டானது முருகபிரானின் பெருமைகள் குறித்து அருணகிரி நாதர் எழுதிய பாடல்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கல்வெட்டு கணபதி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும், தமிழ் மக்களின் உணர்வை மாநகராட்சி அதிகாரிகள் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவையில் தமிழ் கல்வெட்டு ஒன்று பாதாள சாக்கடையை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தமிழ் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
அலட்சியம் என்பது பலரின் ரத்தக்கூறுகளிலும் குடியேறிக்கொண்டுள்ள இந்த காலத்தில் இன்னும் கடமையும், பற்றுணர்வும் கொண்ட மக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு தாம் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.
கோவை கணபதி பேருந்து நிறுத்தம் அருகில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.
மூடப்படாமல் இருந்த இந்த பாதாள சாக்கடையினை தமிழ் கல்வெட்டு ஒன்றை கொண்டு மூடி வைத்துள்ளனர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.
இந்த கல்வெட்டானது முருகபிரானின் பெருமைகள் குறித்து அருணகிரி நாதர் எழுதிய பாடல்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கல்வெட்டு கணபதி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும், தமிழ் மக்களின் உணர்வை மாநகராட்சி அதிகாரிகள் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.