தமிழுக்கு வந்த சோதனை.! : கல்வெட்டை சாக்கடை மூடியாக பயன்படுத்தும் கோவை மாநகராட்சி

கோவை, டிசம்பர்.9 :

கோவையில் தமிழ் கல்வெட்டு ஒன்று பாதாள சாக்கடையை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தமிழ் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

அலட்சியம் என்பது பலரின் ரத்தக்கூறுகளிலும் குடியேறிக்கொண்டுள்ள இந்த காலத்தில் இன்னும் கடமையும், பற்றுணர்வும் கொண்ட மக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு தாம் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது இந்த சம்பவம். 

கோவை கணபதி பேருந்து நிறுத்தம் அருகில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. 

மூடப்படாமல் இருந்த இந்த பாதாள சாக்கடையினை தமிழ் கல்வெட்டு ஒன்றை கொண்டு மூடி வைத்துள்ளனர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள். 

இந்த கல்வெட்டானது முருகபிரானின் பெருமைகள் குறித்து அருணகிரி நாதர் எழுதிய பாடல்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கல்வெட்டு கணபதி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும், தமிழ் மக்களின் உணர்வை மாநகராட்சி அதிகாரிகள் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...