பிரீமியர் பேட்மிட்டன் லீக் போட்டி டிச.19-யில் துவக்கம்


கோவை, டிசம்பர் 8

பிரீமியர் பேட்மிட்டன் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் 19ம் தேதி முதல் 2018 ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது என சென்னை ஸ்மேஷர்ஸ் அணி உரிமையாளரும் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த்தின் மகனும் ஆகிய வி. விஜயபிரபாகர் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-



பிரீமியர் லீக் போட்டிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது கோவை வந்துள்ளேன். 

இந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை தில்லி, அசாம், அகமதாபாத் மற்றும் லக்னோவைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 5 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோர் ஒருவர் என வீரர்கள் இடம்பெறுவர். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 26 வீரர்களில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு இப்போட்டியில் இடம்பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் பி.வி.சிந்துவை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற கரோலினா மரியாவும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இதில், சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் சார்பில் பி.வி.சிந்து கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றியும் பெற்றார்.

இந்த ஆண்டு சென்னையில் ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை அணி சார்பாக பி.வி.சிந்து லக்னோ அணியின் சாய்னா நெஹ்வாலை எதிர்த்து விளையாடவுள்ளார். குறிப்பாக வழக்கத்தைப் போன்று இப்போட்டி 21 புள்ளிகளில் இருந்து மாற்றப்பட்டு 15 புள்ளிகள் என மொத்தம் மூன்று கட்டமாக நடைபெறும்.



இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு ரூ. 3 கோடி முதல் பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.5 கோடி ரூபாயும், அரை இறுதியில் பங்கேற்கும் இரு அணிக்கு தலா 75 லட்சம் ரூபாயும் என மொத்தம் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...