கோவை, டிசம்பர் 1
சின்னியம்பாளையம் பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆய்வு செய்தார்.
கோவையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்தின் போது பல ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டன. அந்த மரங்களுக்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், சட்டவிதியை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் போலியாக மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பதாக கணக்கு காட்டியதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.
இதன் விளைவாக சின்னியம்பாளையம் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த மரக்கன்றுகள் ஐந்து அடி முதல் 10 அடிகள் வரை நன்றாக வளர்ந்துள்ளன.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின் கோவை வரும் வழியில் சின்னியம்பாளையத்தில் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சின்னியம்பாளையம் பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆய்வு செய்தார்.
கோவையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்தின் போது பல ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டன. அந்த மரங்களுக்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், சட்டவிதியை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் போலியாக மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பதாக கணக்கு காட்டியதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.
இதன் விளைவாக சின்னியம்பாளையம் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த மரக்கன்றுகள் ஐந்து அடி முதல் 10 அடிகள் வரை நன்றாக வளர்ந்துள்ளன.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின் கோவை வரும் வழியில் சின்னியம்பாளையத்தில் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.