டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதி

கோவை, நவம்பர் 20

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கோவையை பொறுத்தவரையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 60 முதல் 70 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு அனுமதியாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி, அம்மருத்துவமனையில் 7 ஆண்கள், 14 பெண்கள், 5 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரங்களை காட்டிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்துள்ளது.

இந்த 30 பேரில் கோவை மாவட்டத்தில் இருந்து 16 பேரும், திருப்பூரில் இருந்து 9 பேரும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 பேரும் திண்டுக்கள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...