முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய ஆளுநரிடம் மனு

கோவை, நவம்பர் 15

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் குறித்து முதமைச்சருக்கு  தெரிவித்து, தீர்வு காணப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்துள்ளதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

திருப்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், கோவை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆளுநரை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தினர் சந்தித்தனர். காலை முதல் காத்திருந்தவர்கள் மாலை ஆளுநரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். 



இதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,60 வயதிற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவர்களது மனைவிக்கும் அரசு பேருந்துகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மலுமிச்சம்பட்டியில் நிறைவடைந்துள்ள தொகுப்பு வீடுகளை முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளை சந்திக்கவே முடியாத சூழ்நிலையில் தங்களை நேரில் சந்தித்து ஆளுநர் மனுவை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் என ஆளுநர் உறுதி அளித்தாக தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...