காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு நேர்காணலுக்கு அழைப்பு

கோவை, நவம்பர் 15

கோவை மாவட்டம் காடம்பாறை மின்உற்பத்தி வட்டத்தில் தொழில் பயிற்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நா. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்திற்குபட்ட அலுவலகங்களில் ஒரு வருட ஐ.டி.ஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கு வரைவாளர்கள் (சிவில்) (3 நபர்கள்) வயர்மேன்கள் மற்றும் எலக்ட்ரீசியன்கள் (8 நபர்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர் இவர்களுக்கான நேர்காணல், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள  காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  

எனவே, தகுதியுள்ள நபர்கள் கல்வி சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் மற்றும் இதரச் சான்றுகள் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே, தொழிற்பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த தேர்ச்சி பெறும் தொழிற் பழகுனருக்கு மாதம் ரூ.7,709 வீதம் உதவி தொகை வழங்கப்படும் என காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர்  தெரிவித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...