பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை, நவம்பர் 16: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களுக்கு பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி இன்று காலை அம்மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 900 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இந்த மருத்துவமனையில் 218 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லை என்றும் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சுமார் 100 மருத்துவ செவிலியர்கள் மருத்துவமனையில் உள்ள முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு பணிச்சுமை மிக அதிகமாக இருப்பதாகவும், செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமிப்பதை தவிர்த்து நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, அங்கு வந்த மருத்துவமனை முதல்வர் P.அசோகன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மருத்துவ செவிலியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...