கோவை, நவம்பர் 11: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த டிஇஎல்சி தேவாலயத்தின் 125-ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
இதற்கான விழா, நூற்றாண்டு விழாக் குழு தலைவரும், பாதிரியருமான ஏ. கிறிஸ்டோபர் தலைமையில் டிஇஎல்சி பிஸப் பெக்ஸல் அரங்கில் நடந்தது. இதில், ஆன்மிகத் தலைவர் எட்வின் ஜெயக்குமார், அங்கு கூடியிருந்தவர்களிடம் புனித உரையாற்றினார். இதை தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருள்தாஸும், தனது சிறப்பு உரையை நிகழ்த்தினார். அப்போது, இந்த 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டதற்கு அனைவரிடமும் அவர்கள் நன்றித் தெரிவித்தனர்.