உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வலியுறுத்தி அமைச்சருக்கு கடிதம்

கோவை, நவம்பர் 11:  உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் வனிதா மோகன் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஜுன் மாதம் 21-ம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், குறிப்பாக கட்டுமானத்துறையில் ஒப்புதல் எளிதில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அமைச்சர் அறிவித்திருந்தீர்கள்.

ஆனால், தற்போது, வீட்டுநல வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதலை அளிக்கின்றன அதனால், இந்த நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கட்டுமானங்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்கும்படி, சட்டசபையில் அறிவித்ததைப் போல, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும்.

எங்களதுவேண்டுகோளை ஏற்று உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...