வரும் 11-ம் தேதி புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கான இசை நிகழ்ச்சி


நவம்பர் 09 : தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் ”கேன்செல்லர் பவுண்டேசன்” என்ற தனியார் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் புற்றுநோயிக்கு எதிரான போராட்டம் என்ற நோக்கில், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் 11-ம் தேதி சித்ரா கருத்தரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் நடத்துகின்றனர். 1980-ம் ஆண்டுகளில் வெளிவந்த படங்களின் பாடல்கள் பாடப்படுகிறது. இதில், பங்கேற்கும் பார்வையாளர்களிடம் இசை அல்லது இந்த நிகழ்ச்சி தொடர்பான கேள்வி கேட்கப்படும். அதற்கு, முதலில் பதிலை கூறுபவருக்கு, தனக்கு பிடித்தமான பாடலை மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ரூ.250 மற்றும் ரூ500 டிக்கெட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கட்டணத் தொகையானது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ”பாடவா உன் பாடலை” இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களை திரு. பத்மநாபன் (95004 -98333), திரு.கிருஷ்ணசுவாமி (98430 - 46664) ஆகியோரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...