பணமதிப்பிழப்பு ஒரு பெரும் வெற்றி: வானதி ஸ்ரீனிவாசன்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கியில் வரிசையின் நின்று உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லை எனவும் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அவர்இன்று செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக 17.2 லட்சம் சந்தேகத்திற்கிடமான பணபரிவத்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3.68 லட்சம் கோடி பணம் சந்தேகத்திற்குரியது என கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 7.62 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும், 1626 கோடி பெறுமானமுள்ள பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்களை வெளியிட்ட அவர், காஷ்மீரில் 75 சதவீதம் கல்லெறியும் சம்பவங்கள் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டியாலும் சிறு, குறு நிறுவங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் எடுக்கப்டுவதாகவும் அவர் தெரிவித்தார். 99 சதவீதம் பணம் திரும்பி வந்திருந்தாலும் அதில் கணக்கில் காட்டப்படாமல் இருக்கும் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் வரிசையில் நின்று உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் ஏற்பாடு எதுவும் இல்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...