கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பீளமேடு பகுதியில் உள்ள செங்காளியப்பன் நகர் (வார்டு எண். 38) அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



இன்று அதிகாலை மேம்பாலத்தை ரயில் கடந்து செல்லும்பொழுது அதிர்வு தாங்காமல் கேபிள் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப் படாததால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.



'அதிகாலை நேரத்தில் கம்பிகள் அறுந்து விழுந்ததால் விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், அறுந்து விழுந்த கம்பிகள் மின்கம்பிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் பொதுமக்கள் சிலர், அவற்றை சோதித்து, சாலையோரமாக ஒதுக்கிவைத்தனர்' என்று கூறினார் இப்பகுதியில் வசிக்கும் திரு. சண்முகம்.



காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இப்பகுதியை கடந்து வேலைக்கு செல்பவர்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். மேலும், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. 

பல மணி நேரமாக கீழே விழுந்த கேபிள் கம்பிகள் அகற்றப்படாத நிலையில், தற்போது இப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் கேபிள் கம்பிகளை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...