பீளமேடு பகுதியில் உள்ள செங்காளியப்பன் நகர் (வார்டு எண். 38) அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மேம்பாலத்தை ரயில் கடந்து செல்லும்பொழுது அதிர்வு தாங்காமல் கேபிள் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப் படாததால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.

'அதிகாலை நேரத்தில் கம்பிகள் அறுந்து விழுந்ததால் விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், அறுந்து விழுந்த கம்பிகள் மின்கம்பிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் பொதுமக்கள் சிலர், அவற்றை சோதித்து, சாலையோரமாக ஒதுக்கிவைத்தனர்' என்று கூறினார் இப்பகுதியில் வசிக்கும் திரு. சண்முகம்.

காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இப்பகுதியை கடந்து வேலைக்கு செல்பவர்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். மேலும், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது.
பல மணி நேரமாக கீழே விழுந்த கேபிள் கம்பிகள் அகற்றப்படாத நிலையில், தற்போது இப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் கேபிள் கம்பிகளை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

இன்று அதிகாலை மேம்பாலத்தை ரயில் கடந்து செல்லும்பொழுது அதிர்வு தாங்காமல் கேபிள் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப் படாததால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.

'அதிகாலை நேரத்தில் கம்பிகள் அறுந்து விழுந்ததால் விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், அறுந்து விழுந்த கம்பிகள் மின்கம்பிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் பொதுமக்கள் சிலர், அவற்றை சோதித்து, சாலையோரமாக ஒதுக்கிவைத்தனர்' என்று கூறினார் இப்பகுதியில் வசிக்கும் திரு. சண்முகம்.

காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இப்பகுதியை கடந்து வேலைக்கு செல்பவர்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். மேலும், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது.
பல மணி நேரமாக கீழே விழுந்த கேபிள் கம்பிகள் அகற்றப்படாத நிலையில், தற்போது இப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் கேபிள் கம்பிகளை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.