அதிக கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிக்கு எதிர்ப்பு - பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கைது

கோவை, நவம்பர் 2 : கோவையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை வழங்க முடியும் எனக் கூறிய கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். 

கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் அசோக். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து முடித்தார். இந்த நிலையில், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக ரூ.70 ஆயிரத்தைச் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என அந்தக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதி திராவிடர் நலத்துறையிலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர் தரப்பில் கூறப்படுகின்றது. 



இந்த நிலையில், மாணவர் அசோக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கை அட்டை அணிந்து கையில் தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றும், இதனால் பிச்சை எடுத்து கட்டணத்தை செலுத்தப் போவதாகவும் தெரிவித்த மாணவர் அசோக், படிக்கும் போது கூடுதல் கட்டணத்தை கேட்காமல் தற்போது படித்து முடித்த பின் சான்றிதழ் வழங்க வேண்டிக் கோரிய நேரத்தில் முழு கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகம் கேட்பதாக குற்றம்சாட்டினார். 

மேலும், இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் பேசினாலும் கல்லூரி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழை கொடுக்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அசோக்கை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...