ரூ. 900 கோடி செலவில் உப்பிலிபாளையம் முதல் மருத்துவக்கல்லூரி வரை மேம்பாலம்: முதலமைச்சர் அறிவிப்பு


கோவை, நவம்பர் 1 : கோவையில் 900 கோடி மதிப்பீட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை புதிய மேம்பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

காந்திபுரத்தில் ரூ.195 கோடி மதி்ப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. அதில் பார்க்கேட் முதல் லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் கொண்ட முதல் அடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை  இன்று மாலை திறந்து வைத்தார். 



புதிய பாலம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன்  மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். முதல் அடுக்கு மேம்பால கல்வெட்டு, குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான கல்வெட்டினை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

ரூ.120 கோடியில் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், பாலத்தின் இரண்டாம் அடுக்கும் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.என்று   முதலமைச்சர்  அறிவித்தார்.



மேலும், ரூ.121 கோடியில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலபணிகள் விரைவில் துவங்கும். அதேபோல, உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை 9 கீ.மீ தூரம் வரை ரூ.900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.

மேற்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பட்டு வருகின்றது. பாலங்கள், புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்ட பின் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். கோவை மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், 24 மணி நேரமும் செயல்படும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகின்றார். அவினாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். எதிர்கட்சிகளின் எந்த விமர்சனமும் தங்களிடம் எடுபடாது, என்றார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர், பாலத்தின் வழியாக சிறிது தூரம் பயணம் செய்தார்.



Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...