பணியின் போது மின்சாரம் தாக்கி கைகள் பாதிக்கப்பட்ட இளைஞர் உதவித்தொகை கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  பணியின் போது மின்சாரம் தாக்கியதால் இரு கைகளும் பாதிக்கப்பட்ட இளைஞர் செந்தில்குமார், இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த சேது என்பவரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும் செயல் இழந்தன.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கைகள் பாதிக்கப்பட்ட அவருக்கு 6 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன்-யிடம் தனது இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி இன்று செந்தில்குமார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...