ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விக்கப்படும் : போலீசார் அறிவிப்பு

கோவை, அக்டோபர்.30: கோவை மாநகர 23-வது வார்டுக்கு உட்பட்ட  ஆர்.எஸ்.புரம்  பகுதியில் கோவை மாநகர போலீசார் ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 



இதற்காக அந்த பகுதிக்குட்பட்ட பொன்னுரங்கம்  சாலை, வெங்கடசாமி சாலை, பெரியசாமி சாலை மற்றும் பாஷ்யகர்லோ சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளின் ஒருபுறம் 'நோ பார்க்கிங்' பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த விதியை மீறி வாகனங்களை இருபுறமும் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 



இது தொடர்பாக, போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் வரும் 1.11.2017 முதல் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு ரூ.100 (177 Motor Vehicle Act) அல்லது ரூ.500 (179 Motor Vehicle Act) அபராத தொகை வசூலிக்கப்படும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் 23-வது வார்டு குடியிருப்பு வாசிகள் 8190000100 என்ற வாட்சாப் எண்ணுக்கு புகார்களை அனுப்பலாம். 



Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...