வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை மோதி சிறுவன் காயம்

கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை சிறுவன் மேல் மோதிச் சென்றதால் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ரோப்பமட்டம் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று கோழியை வேட்டையாட சிறுத்தை வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி என்பவரது மகன் தினேஷ்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கோழியை பிடித்து விட்டு திரும்பிய சிறுத்தை அச்சிறுவனின் மேல் மோதிச் சென்றது. இதில் நிலைகுலைந்த தினேஷ்குமார் கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உருளிக்கல் மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 



வால்பாறை பகுதியில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகள் மற்றும் கோழிகளை தாக்கி கொன்று வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...