அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் இடைத்தரகர்களை பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது - முதல்வர் அசோகன்

கோவை, அக்டோபர்.28: கோவை அரசு மருத்துவமனைக்குள் சுற்றித்திரியும் தனியார் மருத்துவமனையின் இடைத்தரகர்களை பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் B.அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். மருத்துவமனைக்குள் சுற்றித்திரியும் சில இடைத்தரகர்கள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை மூளைச்சலவை செய்து லாப நோக்கத்துடன் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிசெல்கின்றனர். அங்கு, பல்வேறு காரணங்களையும், மருத்துவ மொழியில் புரியாத பெயர்களையும் கூறி நோயாளிகளிடம் பணம் சுரண்டப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகர் (40) என்வரை மூளைச்சலவை செய்ய வந்த இடைத்தரகர் ஜான் என்கிற முருகன் என்பவரை போலீசார் கைது செத்தனர்.

இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.B.அசோகன் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் பல நோயாளிகள வருவதை பயன்படுத்திக்கொள்ளும் சில தனியார் மருத்துவமனைகள். இடைத்தரகர்களை அனுப்பி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மூளைச்சலவை செய்து அவர்களின் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கின்றனர்.

முற்றிலும் லாப நோக்கில் நோயாளிகளை அழைத்துச்செல்லும் சில தனியார் மருத்துவமனைகள் இறுதியில் அவர்களுக்கு தருவது ஏமாற்றம் மட்டுமே. 

விபத்தில் சிக்கி இம்மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் போது மறைந்திருக்கும் சில நபர்கள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களிடம் பேசி அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். 

வழக்கறிஞர்கள் 

இதேபோல், வழக்கறிஞர்கள் சிலர் விபத்தில் சிக்கியவர்களிடம், வழக்கு நடத்தி காப்பீடு பெற்றுத் தருவதாக கூறுகின்றனர். வழக்கு நடத்துவதற்கான மொத்த செலவினங்களையும் அவர்களே ஏற்று நடத்துகின்றனர். காப்பீட்டு தொகை கைக்கு வந்ததும் கணிசமான தொகையினை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். வழக்கின் தன்மைக்கு ஏற்ப தான் முதலீடு செய்த பணத்திற்கு வட்டிபோட்டு பணம் வசூலிக்கும் சிலரும் உள்ளனர். காப்பீடு காலம் முடிவடைதல் உள்ளிட்ட சில காரணங்களால் காப்பீட்டுத்தொகை கிடைக்காதபோது தனியார் மருத்துவமனைக்கான செலவு, வழக்கறிஞர்களுக்கு ஆன செலவு என மொத்த தொகையும் அந்த நோயாளியின் தலையில் விழுந்துவிடுகிறது. 

கண்காணிப்பு குழு

மக்கள் இதுபோன்ற நபர்களிடம் ஏமார்ந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் இதுபோன்ற இடைத்தரகர்கள் புகுந்து நோயாளிகளை மூளைச்சலவை செய்யாமல் இருப்பதற்கு கண்காணிப்பு குழு ஒன்று உள்ளது. இந்த கண்காணிப்பு குழுவில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உள்ளனர். தாமாக தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களை தவிர, மற்ற நோயாளிகளை மூளைச்சலவை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு டாக்டர் B.அசோகன் கூறினார்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...