நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரும் பலி - அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது.

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் கடந்த திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கந்து வட்டிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளை மாற்றக்கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கந்துவட்டி கொடுத்தவர்களின் கொடுமை மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமை காரணமாக 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது, இன்னும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...