கந்துவட்டி புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு

அதிக வட்டி வசூல் குறித்த புகார்கள் மீது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதீத வட்டி வசூலிப்பவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அணுகி புகார் அளிக்கலாம். கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர்களும், போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதீத வட்டி வசூல் தடை சட்டம் 2003 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட்டிக்கு பணம் பெற்றவர்கள் அதீத வட்டி வசூல் தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் பணம் செலுத்தி நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...