பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற திருநங்கைகள் மூவர் கைது

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் நேற்று (செவ்வாயன்று) இரவு 8 மணியளவில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை வழியாக சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த திருநங்கைகள் மூன்று பேர் சிவக்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, கத்தியைக் காட்டி மிரட்டி திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக, சிவக்குமார் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக கணபதி பகுதியைச் சேர்ந்த கல்பனா (30), மாயா (32), தனுஸ்ரீ (27) ஆகிய மூன்று திருநங்கைகளை கைது செய்து சிறையிலடைத்தனர்.

முன்னதாக, நேற்று (செவ்வாயன்று) காலை தங்களை சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட திருநங்கைகள் கல்பனா, மாயா, தனுஸ்ரீ ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...