குடியிருப்புகளில் தொடரும் யானைகள் ஊடுருவல் - கும்கி யானையைக் கொண்டு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறைக்கு உட்பட்ட எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் புகுந்து இடையூறு செய்துவருவதைத் தொடர்ந்து கும்கி யானைகளைக் கொண்டு காட்டு யானைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து சில வாரங்களாக காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து உடமைகள் மற்றும் ரேசன் கடை, பள்ளி சத்துணவு கூடங்கள், கடைகள் ஆகியவற்றை சூறையாடி வருகின்றன . 

இந்நிலையில், நேற்று  அதிகாலை வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட்டில் சாகுல் ஹமீது என்பவரின் டீ கடை மற்றும் அருகில் இருந்த சுரேஷ் என்பவரின் மளிகைக்கடை முன்புறத்தில் கதவு ஜன்னல்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.



அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் உள்ள ஈட்டியார் எஸ்டேட்டில் கலா மற்றும் சுப்பிரமணி ஆகியோர்களது வீடுகளின் ஜன்னல்களை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை சேதம் செய்தன. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் யானைகள் செய்வதறியாது தடுமாறின  .

அப்போது பாதுகாப்பின்றி திறந்த நிலையில் இருந்த கிணற்றுக்குள் குட்டி யானை எதிர்பாராத விதமாக விழுந்த நிலையில், தாய் யானையின் உதவியோடு குட்டி யானை மீட்கப்பட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.



இதேப் போல், திங்களன்று தாய்முடி எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானைகள் சுப்பிரமணி, பாக்கியதாய், செல்வி, குருநாதன், முருகாத்தாள், லட்சுமி, சிவா, பாப்பம்மாள், மோகன், இசக்கியம்மாள், வெள்ளைத்துரை ஆகியோர்களது 11 வீடுகளை சேதப்படுத்தியது.

தொடர்ந்து, வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் நுழைந்து சேதப்படுத்தி வருவதால் அவற்றை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் கும்கி யானைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...