மருத்துவமனைகளில் அனாதைகளாக விடப்பட்ட பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவையில் அனாதைகளாக விடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி வேலம்மாள் (40) என்ற பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கணவன் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டதோடு பெற்ற குழந்தையை அரசு மருத்துவமனையிலேயே விட்டுச்சென்றார்.

இந்த குழந்தையை அரசு மருத்துவமனை நிர்வாகம் பத்திரமாக மீட்டது. அதோடு, குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதேப்போல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 5-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே தாய் அக்குழந்தையை பரிதவிக்கவிட்டுச் சென்று விட, குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது தனியார் மருத்துவமனை நிர்வாகம். 

பெற்றோரின் ஆதரவின்றி விடப்பட்ட இரண்டு பிஞ்சு குழந்தைகளும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த இரு குழந்தைகளும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் கூறுகையில், 'இந்த வருடம் ஆதரவின்றி விடப்பட்ட 9 குழந்தைகளை கோவை அரசு மருத்துவமனை மீட்டுள்ளது. அதில் 6 குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகள் அவர்களின் தாய் தந்தையிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுவிட்டனர். 

ஆண்டு தோறும் இது போல் பச்சிளம் குழந்தைகளை அனாதைகளாக விட்டுச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன . கடந்த ஆண்டு 11 பச்சிளம் குழந்தைகள் ஆதரவின்றி விடப்பட்டன. இதில் பெரும்பாலானவை பெண் குழந்தைகள்.

ஆதரவற்ற, திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத ஆண்கள் இவ்வாறு பிஞ்சு குழந்தைகளை அனாதைகளாக விட்டுச் சென்றுவிடுகின்றனர். இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று' என்று அவர் கூறினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...