பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் போராட்டம்



10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவையின் பல்வேறு இடங்களில் ஐ.டி.பி.ஐ. வங்கியானது 9 கிளைகளை நிறுவி, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று (அக்.,24) முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் ஒருபகுதியாக, பாலசுந்தரம் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்பு ஊழியர்கள் 30 பேர் போராட்டம் நடத்தினர். 

போராட்டம் குறித்து கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், அனைத்து வங்கிகளிலும் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் முதல் 10-வது இருதரப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நிதியாண்டின் முடிவில், ரூ.5,158 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.25,205 கோடியாகும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...