டெங்கு ஒழிப்பு பணியில் மாவட்ட ஆட்சியருடன் கல்லூரி மாணவர்கள்

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தீத்திபாளையம் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் இன்று (அக்டோபர் 24 மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உடன் கல்லூரி மாணவர்கள் இணைந்து களப்பணியாற்றினர்.



அப்போது அவர் கூறுகையில், கோவை மாவட்ட நிர்வாகம் டெங்கு காயச்சல் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் என்ற அடிப்டையிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை நியமித்து தினந்தோறும் களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று தீத்திபாளையம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் தீத்திபாளையத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு தங்களுக்கு அளிக்கப்பட்ட படிவத்தின் அடிப்படையில் விவரங்களை சேமித்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பிப்பர். அதனடிப்படையில், ஏடிஸ் கொசுப்புழு உருவாக காரணமாக உள்ள வீடுகளுக்கு அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்றே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தன்னார்வத்துடன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் அமைப்புகள் என அனைவரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்று பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர்கள் மூலம் விழிப்புணர்கள் ஏற்படுத்தும் போது, அவர்கள் சார்ந்த பகுதிகளில் தூய்மையடைவதோடு பொதுமக்களும் மாணவர்கள் கூறுவதை கேட்டு அதிகளவில் விழிப்படைகின்றனர். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது பேரூர் வட்டாட்சியர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பார்த்தீபன் உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...