திருநங்கைகளை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கோவையில் பாலியல் தொழிலை செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடைபெற்ற மனு நீதி நாள் முகாமின் போது திருநங்கைகள் மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் தங்களை சில திருநங்கைகள் பாலியல் தொழிலை தொடரச் சொல்லி வற்புறுத்துவதாகவும், அவர்களிடம் உள்ள தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரியும் மனு அளித்திருந்தனர்.

இது தொடர்பாக கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் போலீசார் சமாதானப்படுத்த மட்டுமே முயற்சித்ததாகவும் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மூவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூவரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...