கோவை அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (22). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தூர் தட்டான் தோட்டம் என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.
அவருடன் அவரது நண்பரும் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவருமான கரிகாலன் (31) என்பவரும் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், சேதுராமன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுகுமார், சேதுராமனை பார்க்கச்சென்ற போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக சுகுமார், சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சேதுராமன் தங்கி இருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டது. மேலும், அவர் கொலை செய்யப்பட்ட போது ஒரு பெண் அறையில் இருந்து தப்பியோடியதாகவும் தெரிகிறது.
எனவே பெண் தகராறில் சேதுராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சேதுராமனுடன் உடனிருந்த கரிகாலனை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (22). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தூர் தட்டான் தோட்டம் என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.
அவருடன் அவரது நண்பரும் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவருமான கரிகாலன் (31) என்பவரும் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், சேதுராமன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுகுமார், சேதுராமனை பார்க்கச்சென்ற போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக சுகுமார், சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சேதுராமன் தங்கி இருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டது. மேலும், அவர் கொலை செய்யப்பட்ட போது ஒரு பெண் அறையில் இருந்து தப்பியோடியதாகவும் தெரிகிறது.
எனவே பெண் தகராறில் சேதுராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சேதுராமனுடன் உடனிருந்த கரிகாலனை தேடி வருகின்றனர்.