சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பாரத் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



இது தொடர்பாக பாரத் சேனா அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது, சிங்காநல்லூர் பேருந்து பின்புறம் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை (1655) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் குடிமகன்கள்  சாலையின் இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.  இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

அதுமட்டுமில்லாமல்,  அந்த டாஸ்மாக்க கடையில்  மது அருந்திவிட்டு சாலையின் ஓரம் நின்று கொண்டு தகாத முறையில் பேசுவதாலும், தகாத செயல்களை செய்வதாலும் அவ்வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்மார்கள், மிகுந்த அச்சத்துடன் செல்லக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லக் கூடிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இங்கு 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எனவே, அக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில்,  பாரத் சேனா தமிழ்நாடு சார்பில், பொதுமக்களோடு இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...