கோவையில் எதிர்பார்த்த இலக்கை எட்டாத மது விற்பனை


கோவை மாவட்டத்தில், தீபாவளி அன்று மட்டும் 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 0.5 சதவிகிதம் குறைவு என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கவுண்டம்பாளையத்தை மையமாகக் கொண்டு வடக்கு என்றும், பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு என்றும், மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் கோவை மாவட்டத்தில் இயங்கிவருகின்றன . இங்கு சாதாரண நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கும். தீபாவளி, பொங்கல், புது வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இரு மடங்காக அதிகரிக்கும்.

அதன்படி, இந்த வருட தீபாவளிக்கு 12 கோடிக்கு மேல் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 6 லட்சம் ரூபாய் குறைந்து, 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

இதில் வடக்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.6 கோடியே 59 லட்சத்திற்கும், தெற்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.5 கோடியே 26 லட்சத்திற்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து ஒரு டாஸ்மாக் அலுவலர் கூறியதாவது, "இந்த தீபாவளிக்கு அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலை உயர்வு மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட காரணங்களால் சென்ற ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துள்ளது" என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 12 லட்சத்தி 46 ஆயிரத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையை விட குறைவாகும்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...