வால்பாறை தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையை அடுத்துள்ள தனியார்  தேயிலைத் தோட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் வருடந்தோறும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்குவது வழக்கம்.



இந்நிலையில், நடப்பாண்டிற்கான போனஸ் கடந்த 7-ம் தேதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 8.33 சதவிகிதம் போனஸ் தொகையாக தொழிலாளர்களின் வங்கிக்  கணக்கில் எஸ்டேட் நிர்வாகம் செலுத்தியுள்ளது.

இதையறிந்த தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோட்ட நிர்வாகத்தின் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, விடுதலை கட்சியின் தொழிற்சங்க தலைவர் வீரமணி, கேசவமுருகன், ஐஎன்டியூசி பிரபாகரன், சிஐடியூ பரமன், ஹெச்.எம்.எஸ் மாணிக்கம், சோலையார் எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி முருகன் ஆகியோர் 17-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 20 சதவிகித போனஸ் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...