வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் பீதி

வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் நேற்று (அக்.,18) நள்ளிரவு 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை கதவு மற்றும் சுவற்றை உடைத்து பொருட்களை நாசம் செய்தது.



அருகாமையில் உள்ள மளிகை கடை மற்றும் தேவாலயத்தின் கதவுகள் மற்றும் சுவற்றையும் உடைத்து, நாற்காலி ஆகிய பொருட்களை நாசம் செய்தது. இதனைக் கண்டு பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீ பந்தம் ஏற்றியும், கூச்சலிட்டும் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.  இதனைத் தொடர்ந்து, யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன .. குடியிருப்பு பகுதிக்கு வெகு அருகிலேயே யானைகள் இருப்பதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 



இதேபோல, வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட நடுமலை எஸ்டேட்டில் உள்ள களஅதிகாரி எபி என்பவரின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அருகில் உள்ள எஸ்டேட் மஸ்டர் கதவு மற்றும் சுவற்றையும் உடைத்தும், முடித்திருத்தகத்தையும்  சேதப்படுத்தியது. தொடர்ந்து வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முத்துமுடி எஸ்டேட், முருகாளி, பெரியகல்லார், நடுமலை, அணலி, பச்சமலை ஆகிய எஸ்டேட்டுகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கும்கி யானையை கொண்டு காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...