சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கமான ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைப்பு

வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கமான ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சேலம், ஜோலார்பேட்டை மார்க்கத்தில் புத்திரெட்டிபட்டி மற்றும் பொம்மிடி பகுதிகளுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், சேலம், ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், 

செவ்வாய்கிழமை (அக்., 24, 31 மற்றும் நவம்.,07) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

 

ரயில் எண் : 22815, பிலாஷபூர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

புதன்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

பிற ரயில்களின் தாமதத்தினால், ரயில் எண் : 22619, பிலாஷபூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து பிலாஷபூர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

வியாழக்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

ரயில் எண் : 12970, ஜெய்ப்பூர் கோவை எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

இதேபோல, 16360, பாட்னா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 10 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 10 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை (அக்.,22, 29 மற்றும் நவம்.,05) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

ரயில் எண் : 07115, ஐதராபாத் கொச்சிவெலி சிறப்பு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது. 

இவ்வாறு, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...