கோவையில் டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை - அமைச்சரின் பேச்சால் குழப்பம்



டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். 

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழக அரசு வேகமாக செயல்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதுவரை கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பே ஏற்படவில்லை. உயிரிழப்புகள் இல்லாததால் கோவையில் ஆய்வு செய்ய மத்திய குழு வரவில்லை. தண்ணீரை மாற்றி குடித்தால் காய்ச்சல் வருகிறது. டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த இரு மாதங்களில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...