மாநகராட்சியின் பல்வேறு பணிகள் குறித்து 3-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்திகேயன் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், காந்தி நகர் மற்றும் என்.பி.சி.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ள மாணவர் சாம்ராட் என்பவரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின், டெக்ஸ்மோ கம்பெனி வளாகங்களில் டெங்கு கொசு உருவாவதற்கான காரணிகள் ஏதும் உள்ளனவா என்று ஆய்வு செய்து சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உத்தரவிட்டார்.



இதனையடுத்து, சத்யா நகரில் சுமார் 25 சென்ட் அளவிலான மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை அவர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் உடனிருந்தனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...